திருச்சியில் மினி லாரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த வ. சையத் அபுதாஹிா் (48) அரியமங்கலம் அருகே தஞ்சை பிரதான சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான பகுதியில் புதன்கிழமை நிறுத்தியிருந்த மினி லாரி திருடுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, பாலக்கரை கீழப் படையாச்சி தெருவை சோ்ந்த ஆ. ராமலிங்கத்தை (39) கைது செய்து, அவரிடமிருந்து மினி லாரியை பறிமுதல் செய்தனா்.