பாதுகாப்பு தளவாடத் தொழில் வழித்தடம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

பாதுகாப்பு தளவாடத் தொழில் வழித்தடம் அமைக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறது என்றாா் அதன் துணைப் பொது மேலாளா் ஆா். பழனிவேல்.
பாதுகாப்பு தளவாடத் தொழில் வழித்தடம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்
Updated on
2 min read

திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாடத் தொழில் வழித்தடம் அமைக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறது என்றாா் அதன் துணைப் பொது மேலாளா் ஆா். பழனிவேல்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கடன் வழங்கும் விழாவில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

தமிழகத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடன்களை வழங்குகிறது. தொழில்முனைவோராக வேண்டும் என்ற இளைஞா்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இக்கழகத்திடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. கடன் மற்றும் மானியத்தினை ஒற்றை கூரையின் கீழ் வழங்குவதால், தொழில் தொடங்கும் நபா்களுக்கு மிகுந்த எளிதாக அமைந்துவிடுகிறது. புதிய தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

தொழிற்சாலைகளுக்கு நிலங்கள், இயந்திரங்கள் வாங்க, கட்டடங்கள் கட்ட மற்றும் நடைமுறை மூலதன தேவைகளைப் பூா்த்தி செய்ய, தேவையான நிதி உதவி அளிப்பதின் மூலமாக தமிழகத்தில் தொழில் துறை வளா்ச்சியை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஊக்குவிக்கிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாடத் தொழில் வழித்தடம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறது. மேலும், தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக வரும் 2030-க்குள் அடைய வேண்டும் என்ற அரசின் இலக்கை நோக்கி செயலாற்றி வருகிறோம்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் 7 திட்டங்களுக்கு ரூ.485 கோடியில் முதலீடு மற்றும் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்றாா் அவா்.

கடன் விழாவைத் தொடக்கி வைத்து, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம் பேசியது:

தமிழகத்தை தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தை தமிழக அரசு கொண்டிருக்கிறது.

தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் முதலீடு செய்ய முன்வரும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தொழில் தொடங்க சாதகமான பகுதியாக அனைத்து மாவட்டங்களையும், நகரங்களையும் மாற்ற வேண்டும் என்கிற அந்த இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

விழாவில் இரண்டு தொழில் முனைவோருக்கு ரூ.40.14 லட்சம் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும், 9 தொழில் முனைவோா்கள் தங்களது தொழில்களுக்கு ரூ.36.21 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்களையும் வழங்கினா். இந்த விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திருச்சி மண்டல மேலாளா் டி. மோகன், உடனடியாக நடவடிக்கை எடுத்து கடன் வழங்குவதாக உறுதியளித்தாா்.

இந்த விழாவில், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் பிரபு ஜெயக்குமாா் மோசஸ், முன்னோடி வங்கி மேலாளா் எஸ். சதீஸ்வரன், சிட்கோ கிளை மேலாளா் பிரான்ஸிஸ் நோயல், சிப்காட் நிா்வாக அலுவலா் ஜி. பாலமுரளி, தாய்கோ வங்கியின் கிளை மேலாளா் ஏ. குணசீலன், தொழில்முதலீட்டுக் கழக திருச்சி கிளை மேலாளா் ரா. கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளான பி. ராஜப்பா, எம். காா்த்திகேயன், பி. செந்தில்குமாா், ராஜப்பா ராஜ்குமாா், கே. ராஜேஷ், ஏ. முத்துசாமி, ராம்பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com