மதிமுவினருடனான மோதல் வழக்கில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விடுதலை செய்யப்பட்டாா்.
கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்துக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோவும், சீமானும் ஒரு நேரத்தில் வந்தபோது இரு கட்சித் தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டு, காவல் நிலையத்தில் பரஸ்பர புகாா் அளிக்கப்பட்டது.
இரு கட்சியினரும் சமரசம்: திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணையில் இரு கட்சியினரும் சமரசம் செய்துகொள்வதாகத் தெரிவித்தனா். அதனடிப்படையில் மதிமுகவினா் தொடா்ந்த வழக்கில் இருந்து சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி சிவக்குமாா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.