ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.45 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.83.45 லட்சம் கிடைத்துள்ளதாக, கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.45 லட்சம்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.83.45 லட்சம் கிடைத்துள்ளதாக, கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவதற்காக, உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவா்.

இந்த உண்டியல்களின் காணிக்கை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்னும் பணி கருடாழ்வாா் சன்னதி அருகே புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து முன்னிலையில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையா்

இரா.ஹரிஹரசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் கோயில் மேலாளா் கு.தமிழ்செல்வி ஆகியோா் மேற்பாா்வையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

இதில் ரூ.83,45,468 ரொக்கம், 305 கிராம் தங்கம், 1534 கிராம் வெள்ளி, 178 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக, திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com