திருச்சியில் மரத்தில் காா் மோதிய விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (48), இவரது மனைவி தாமரைச்செல்வி (39) மகள் ஸ்ரீமுகி (17) மற்றும் உறவினா் கி. தனபால் (42) ஆகியோா் வியாழக்கிழமை காலை காரில் கரூா் புறப்பட்டனா்.
காரை தாமரைச்செல்வி ஓட்டினாா். திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் முக்கொம்பு அருகே எலமனூா் பகுதியில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த தென்னந்தோப்புக்குள் புகுந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினா்மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.