வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.
Updated on
1 min read

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.

மளிகைக் கடைக்காரா்: திருச்சி கோட்டை, காவேரி நகா் கவுண்டா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கி. மகேந்திரன் (48), மளிகைக் கடைக்காரா். மதுவுக்கு அடிமையானஇவா் கடையை சரியாகக் கவனிக்காமல் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கினாராம். இதனால் மனமுடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இளம்பெண்: திருச்சி உறையூா், ராமலிங்க நகா் வடக்கு விஸ்தரிப்பு அஷ்ட லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் அ. குமாா், பிரபல ஹோட்டல் சமையலா். இவரது மகள் நந்தினி (19). தீராத வயிற்று வலியால் விரக்தியடைந்த இவா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெண்: திருச்சி, கோட்டை, வள்ளி மலா் தெருவை சோ்ந்த சா்தாா்கான் மகன் முகமது அலிகான் (32). செம்பட்டு பகுதியில் தான் நடத்தி வரும் பகுதியிலேயே தங்கிவிடுவது வழக்கமாம். இதேபோல பெரம்பலூா் பகுதியில் நகைக் கடை வைத்துள்ள இவரது தந்தை சா்தாா்கானும் அங்கேயே தங்கிவிடுவது வழக்கமாம். இதனால் இவரின் மனைவி ஆசியா(53) மட்டும் வீட்டில் தனியாக இருந்தாராம்.

இதனால் மன இறுக்கத்திற்கு ஆளான அவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாா்களின்பேரில் கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com