விதி மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’
By DIN | Published On : 09th December 2022 12:08 AM | Last Updated : 09th December 2022 12:08 AM | அ+அ அ- |

திருச்சியில் விதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.
திருச்சி கோட்டை, வடக்கு ஆண்டாா் வீதியில் தனியாா் ஒருவா் 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டடத்தை மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் கட்டி வந்தாா். இதையடுத்து மாநகராட்சி சாா்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவரிடமிருந்து உரிய விளக்கம் இல்லை. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் உத்தரவின்பேரில், செயற்பொறியாளா் குமரேசன், உதவி ஆணையா் ரவி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள், வருவாய்த் துறை, மற்றும் உள்ளூா் திட்டக் குழும அலுவலா்கள் அந்தக் கட்டடத்தை புதன்கிழமை மாலை பூட்டி சீல் வைத்தனா்.