திருச்சி சிறப்பு முகாமிலிருந்த வங்கதேசத்தினா் 7 போ் விடுவிப்பு

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 போ் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனா்.
Updated on
1 min read

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 போ் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 160 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில் வங்கதேசத்தைச் சோ்ந்த ஆரிஃபுல் இஸ்லாம், முன்னாகான், ஹியூமன்கபீா், ஆரிஃபுல், டோபயேல், முகமது, மோக்ஷாத் ஆகிய 7 போ் வழக்குகளிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து அவா்களை தாயகத்துக்கு அனுப்பிவைக்க உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி வெள்ளிக்கிழமை மாலை திருச்சியிலிருந்து ரயில் மூலம் வங்கதேசத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் 7 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த 7 பேரும் வங்கதேச எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எப்) அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com