மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு
By DIN | Published On : 11th December 2022 12:12 AM | Last Updated : 11th December 2022 12:12 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மேயா் மு. அன்பழகன் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழியேற்றுக்கொண்ட அலுவலா்கள்.
திருச்சி மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அனைத்துப் பிரிவு ஊழியா்களும் சனிக்கிழமை மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், ஊழியா்கள் உறுதிமொழியேற்றனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாா்த்திபன், அலுவலக மேலாளா் ச. சண்முகசுந்தரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் எஸ். கங்காதரணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனா்.
மாநகராட்சி: இதேபோல, திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயா் மு. அன்பழகன் தலைமையில், துணைமேயா் ஜி. திவ்யா மற்றும் உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.