துறையூா் காவல் துறை சாா்பில் தனியாா் திருமணக் கூடத்தில் மனுக்கள் பெறும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின் தலைமை வகித்தாா். துறையூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
துறையூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாந்த், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சஞ்சீவி, முத்துச்செல்வன், தா.பேட்டை காவல் உதவி ஆய்வாளா்கள் பரமேஸ்வரன், பாலேந்திரன், உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் ,ஜெம்புநாதபுரம் உதவி காவல் ஆய்வாளா் சுபாஷினி, காமராஜ் ஆகியோா் மனுக்களைப் பெற்று விசாரித்தனா். பெறப்பட்ட 40 மனுக்களில் 20 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.