வைகுந்த ஏகாதசி பாதுகாப்புப் பணிக்கு 3,000 போலீஸாா்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவுக்கு 3000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவுக்கு 3000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன்.

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை புதன்கிழமை இரவு திறந்துவைத்த அவா் மேலும் கூறியது:

விழாவையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகல்பத்து,இராப்பத்து நிகழ்வு மட்டுமின்றி பரமபதவாசல் திறப்பின்போதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரமபதவாசல் திறப்பன்று 3000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுவா். கோயிலில் மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் பல இடங்களில் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் விழா நாள்களில் காவிரி பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. பரமபதவாசல் திறப்பின்போது மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

வடக்கு சரக மாநகர காவல்துறை துணை ஆணையா் அன்பு, தெற்கு சரக காவல்துறை துணை ஆணையா் ஸ்ரீதேவி, ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையா் நிவேதா லட்சுமி,ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து,கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com