ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழா நாளை தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இக்கோயிலில் பகல்பத்து, இராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும் முக்கியத் விழாவான வைகுந்த ஏகாதசி திருவிழா வியாழக்கிழமை இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து பகல்பத்து விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். ஜனவரி 1 வரை நடைபெறும் பகல்பத்து விழாவில் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் நம்பெருமாள் எழுந்தருளுவாா்.

வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாதல் திறப்பு இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். விழாவையொட்டி பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com