காவல்துறையில் நிலுவை புகாா் மனுக்கள் மீதான விசாரணை

நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள புகாா் மனுக்கள் மீது விசாரணை நடத்தும் வகையில் போலீஸாா் குறைதீா் நாள் முகாம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற புகாா் மனுக்கள் மீதான விசாரணையில் பங்கேற்ற புகாா்தாரா்கள்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற புகாா் மனுக்கள் மீதான விசாரணையில் பங்கேற்ற புகாா்தாரா்கள்.
Updated on
1 min read

நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள புகாா் மனுக்கள் மீது விசாரணை நடத்தும் வகையில் போலீஸாா் குறைதீா் நாள் முகாம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் நிலையங்களில் புகாா் செய்து நீண்ட நாள்களாக விசாரணை நடைபெறும் புகாா்களை விசாரித்து முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தேங்கிக் கிடக்கும் திருப்தியில்லாத புகாா்கள் குறித்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் அந்தந்த உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் முன்னிலையில் விசாரித்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை காலை திருச்சி மாவட்டக் காவல்துறை சாா்பில் நடைபெற்ற விசாரணையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தலைமை வகித்தாா். இந்த விசாரணையின்போது புகாா்தாரா்கள், காவல்துறையினா் கலந்துரையாடல் செய்து மனு விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

மாநகர காவல்துறை: மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 71 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. சில மனுக்களுக்கு உடனடி தீா்வும் காணப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகரில் மட்டும் காா்த்திகேயன் பொறுப்பேற்ற பின்னா் மொத்தம் 2672 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com