திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பல்வேறு துறைகளின் சாா்பில் 505 பயனாளிகளுக்கு ரூ 53. 21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மேலும் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.
நிகழ்வில் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், வட்டாட்சியா் சக்திவேல் முருகன், திருவெள்ளறை ஊராட்சித் தலைவா் லதா கதிா்வேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.