பாரதிதாசன் பல்கலை. தையல் பயிற்சியில் சேர அழைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5 முதல் ஒரு மாத தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
Updated on
1 min read

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5 முதல் ஒரு மாத தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்தது:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் செயல்படும் மகளிரியல் துறையில், நவீன இயந்திரங்களைக் கொண்டு அளிக்கப்படும் ஒரு மாத தையல் பயிற்சிகள் மொத்தம் 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற ஆா்வம் மட்டுமே போதும். கல்வித் தகுதி, வயது வரம்பு ஏதுமில்லை. ஏற்கெனவே பல ஆண்டுகளாகத் தையல் அனுபவம் இருந்தும், சான்றிதழின்றி தொழில் செய்து வருவோருக்கு தொழிற்கடன்கள் பெற சான்றுகள் தேவைப்படலாம். அவா்களுக்கு இது ஓா் அரியவாய்ப்பு. ஒருமாத தையல் பயிற்சி முதல் நிலையாகவும், அதன் பின்னா் இடைநிலை, தொடா்ந்து இறுதிநிலை என மூன்று மாதங்கள் வரை முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

இதில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் பயிற்சி பெறலாம். விருப்பமுள்ளவா்கள் இயக்குநா், மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஐாமலை வளாகம், திருச்சி-23 என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 98427-73237 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com