நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் (த.நு.வா.க.) காலியிடங்களை நிரப்பக் கோரி அதன் பொதுத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் (த.நு.வா.க.) காலியிடங்களை நிரப்பக் கோரி அதன் பொதுத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி த.நு.வா.க. மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவா் எஸ். வேலு தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாவட்ட செயலா் எஸ். ரங்கராஜன், மாவட்டத் தலைவா் எஸ். சீனிவாசன் உள்ளிட்டோப் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பருவ கால பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளா்களின் பணியிட மாற்றங்களில் பாரபட்சம் பாா்க்கக் கூடாது. கழகப் பணியாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் ஊழியா்களுக்கு கூலி உயா்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. திரளான பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com