

திருச்சி உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் சனிக்கிழமை நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலான இக் கோயிலில் மாசி மாத தெப்பத்திருவிழா கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் தாயாா் கமலவல்லி நாச்சியாா் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவத்தையொட்டி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாயாா் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் வீதி உலா வந்தாா்.நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பந்தக்காட்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.