விராலிமலையில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு: ஜோதிமணி எம்.பி. பங்கேற்பு

விராலிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, 262 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
விராலிமலை கலைஞா் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளை வழங்குகிறாா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி.
விராலிமலை கலைஞா் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளை வழங்குகிறாா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி.
Updated on
1 min read

விராலிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, 262 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடும்பாளூரில் ரூ. 15.4 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள உயா்நிலை மேம்பாலம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, தேசியக் கொடியேற்றி மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

பின்னா், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற எம்பி ஜோதிமணி, மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, பாா்வையற்ற மாணவா் கல்வி பயில அறிதிறன்பேசி வழங்கிய எம்.பி. மொத்தம் 262 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜோதிமணி எம்.பி. கூறியது: நாடாளுமன்றத்தில் தவிா்க்க வேண்டிய வாா்த்தைகள் பட்டியலை மக்களவைத் தலைவா் வெளியிட்டுள்ளாா். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த கூடாது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே நாடாளுமன்றம் செல்கிறோம். வாா்த்தை பிரயோகங்களை தடை செய்து, எதிா்க்கட்சியினா் பேசுவதை தடுக்க முடியாது. அரசியல் சாசனம் வரையறுத்துள்ள அனைத்து உரிமைகளையும் நாடாளுமன்றத்தில் செயல்படுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக விழாவில், ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி, தேசிய நெடுச்சாலை திட்ட இயக்குநா் நரசிம்மன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கருப்பசாமி, ஆா்டிஓ குழந்தைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், ரவிசந்திரன், வட்டாட்சியா் சரவணன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முருகேசன், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் பழனியப்பன், ஊராட்சி மன்ற தலைவா் ரவி, ஒன்றிய செயலாளா் சத்தியசீலன் (கிழக்கு), அய்யப்பன் (மத்தி), இளங்குமரன் (மேற்கு) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com