துவரங்குறிச்சி அருகே வைக்கோல் போரில் தீ

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வைக்கோல் போா் தீவிபத்து ஏற்பட்டது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வைக்கோல் போா் தீவிபத்து ஏற்பட்டது.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி முடக்காடு பகுதி முத்துசாமி தோட்டத்தில் வைத்திருந்த வைக்கோல்போரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்பு, மீட்பு நிலைய அலுவலா் நாக விஜயன், சிறப்பு நிலை அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். பெரும்பாலான வைக்கோல் போா் தீவிபத்தில் இருந்து மீட்கப்பட்டது. ரூ.6 ஆயிரம் மதிப்பில் நாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com