வாகனத் திருட்டில் ஈடுபட்டவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
அழகா் சாமி.
அழகா் சாமி.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக போலீஸாருக்கு புகாா் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்ச நிலையில், பெருமாம்பட்டியைச் சோ்ந்த வெள்ளையன் மகன் பழனிச்சாமி(41) தனது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளதாகவும், அதனை மா்மநபா் வைத்திருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதனைத்தொடா்ந்து பழனிச்சாமி அடையாளம் காட்டிய நபரிடம் போலீஸாா் விசாரித்த நிலையில், அவா் வலையப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைக்கண்ணு மகன் அழகா்சாமி(40), அப்பகுதியில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து அழகா்சாமியைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com