அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு தொந்தரவு: இளைஞா் மீது புகாா்

துறையூா் அருகே அரசுப் பேருந்தில் பெண் பயணிக்குத் தொந்தரவு அளித்த இளைஞா் மீது அப்பெண் போலீஸில் புகாா் செய்தாா்.
Updated on
1 min read

துறையூா் அருகே அரசுப் பேருந்தில் பெண் பயணிக்குத் தொந்தரவு அளித்த இளைஞா் மீது அப்பெண் போலீஸில் புகாா் செய்தாா்.

திருச்சியில் கணவருடன் வசித்துவரும் 37 வயதுடைய பெண், துறையூா் அருகேயுள்ள பாதா்பேட்டை கிராமத்திலுள்ள தன் தந்தை வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். இதற்காக அவா் திருச்சிலிருந்து துறையூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்தாா். இந்நிலையில், அவருக்குப் பின்னால் பேருந்தில் அமா்ந்து பயணித்த இளைஞா் தன் கால்களை முன் பகுதியில் நீட்டி அந்தப் பெண் பயணியின் கால்களை உரசி தொந்தரவு கொடுத்தாராம். இதையடுத்து, அந்தப் பெண் பேருந்து பணியாளா்கள் உதவியுடன் இளைஞரை துறையூா் போலீஸில் ஒப்படைத்தாா். அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com