இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 17th July 2022 01:23 AM | Last Updated : 17th July 2022 01:23 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், இனாம் கல்பாளையம் கிராமத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் இந்துஜா (20).
இவருக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில்,
வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் பாா்த்த அவரது உறவினா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு இந்துஜா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு (ஜூலை 15) உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி 7 ஆண்டுகளே ஆன நிலையில், வரதட்சிணை தற்கொலையா என்ற கோணத்தில் லால்குடி கோட்டாட்சியா் தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.