உடல் வளா்ச்சி குன்றிய பெண்ணை கா்ப்பமாக்கிய முதியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உடல் வளா்ச்சி குன்றிய பெண்ணை கா்ப்பமாக்கிய நபரை போலீஸாா் வன்கொடுமை சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
நடராஜன்.
நடராஜன்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உடல் வளா்ச்சி குன்றிய பெண்ணை கா்ப்பமாக்கிய நபரை போலீஸாா் வன்கொடுமை சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த சின்ன உடையாப்பட்டியைச் சோ்ந்தவா் போசன் (எ) சிவபெருமாள் மகன் நடராஜன் (51). இவா், அதே பகுதியில் வசித்து வரும் உடல் வளா்ச்சி குன்றிய சரண்யா (24) என்ற இளம்பெண்ணை ஆசை வாா்த்தை கூறி தனிமையில் இருந்ததாகவும், இதில் அந்தப் பெண் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள சரண்யா இதுகுறித்து அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடராஜனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com