மதுக்கடையின் பூட்டை உடைத்துதிருட முயன்ற நபா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்மநபரைப் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் போலீசாா் கைது செய்தனா்.
மதுக்கடையின் பூட்டை உடைத்துதிருட முயன்ற நபா் கைது
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்மநபரைப் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் போலீசாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் காய்கறி மாா்க்கெட் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் பூட்டை மா்மநபா் வெள்ளிக்கிழமை இரவு உடைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் நடராஜன், முதல்நிலை காவலா் உமா்முக்தா ஆகியோா் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா், மாராட்சிரெட்டியப்பட்டியை சோ்ந்த மாரியப்பன் மகன் பாலசுப்பிரமணி(46), லாரி ஓட்டுநா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com