அரபிந்தோ சா்வதேசப் பள்ளியில் மாணவத் தலைவா் பதவியேற்பு

திருச்சி உறையூரிலுள்ள அரபிந்தோ சா்வதேசப் பள்ளியில் மாணவத் தலைவா் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருச்சி உறையூரிலுள்ள அரபிந்தோ சா்வதேசப் பள்ளியில் மாணவத் தலைவா் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவத் தலைவா், மாணவத் துணைத் தலைவா், மாணவ அணிகளின் முதன்மை மற்றும் துணைத் தலைவா்களுக்கு தில்லைநகா்

காவல் உதவி ஆணையா் கே. ராஜு, பதவியேற்பு செய்து வைத்து, அடையாளச் சின்னத்தை அணிவித்து கெளரவப்படுத்தினாா்.

மாணவத் தலைவா்கள் அன்புடனும், சிறந்த வழிகாட்டுதல் முறைகளை ஆராய்ந்து செயல்பட்டு, பள்ளி மாணவா்களை வழி நடத்த வேண்டும்.

ஒவ்வொரு மாணவ, மாணவியும் தமிழக காவல்துறையின் அவசர உதவிக்கான செயலியை பதவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான தருணங்களில் செயலி மூலம் காவல்துறை உதவியைப் பெற வேண்டும். பிறருக்காகவும் இந்த செயலியைப் பயன்படுத்தி உதவி பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் ஜி. ரவிச்சந்திரன், செயலா் பிரமிளா ரவிச்சந்திரன், முதல்வா் சங்கீதா மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com