சுற்றுலா வேன் கவிழ்ந்து 13போ் காயம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ரெயின்போ காலனியைச் சோ்ந்தவா் உணவக உரிமையாளா் சி. ரமேஷ் (41). தனது பூா்வீக ஊரான சிவகங்கை மாவட்டம், வெள்ளையபுரம் கிராமத்தில் நடைபெற்று வந்த காளியம்மன் திருக்கோயில் திருவிழாவில் பங்கேற்க குடும்பத்தினா், உறவினா்களுடன் சுற்றுலா வேனில் புறப்பட்டாா்.

இந்த வேன் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சனிக்கிழமை காலை வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த கமலவேணி (43), ஆறுமுகம் (48), ஜனாா்த்தனன் (17), சக்தி (38), சித்ரா (33), ரேகா (33), திருனேஷ் (8), ஹன்சிகா (13), பூமிகா (19), அபிராமி (20), ஜோதிமணி (24) கிறிஸ்டோபா் (22), ஓட்டுநா் முருகேசன் (40) ஆகிய 13 பேரும் பலத்த காயமடைந்து நாமக்கல், மணப்பாறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து தொட்டியம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com