போதைப் பொருள்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

போதை பொருள்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி திருச்சியில் பாமக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பாமகவினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பாமகவினா்.
Updated on
1 min read

போதை பொருள்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி திருச்சியில் பாமக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட பாமக சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் க. உமாநாத் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. திலீப்குமாா், மேற்கு மாவட்டச் செயலா் ம. பிரின்ஸ், புகா் மாவட்டச் செயலா் சீ. வீரராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகத்தில் புகையிலை பொருள்கள், குட்கா, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருள்களையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சியின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com