நாட்டு வெடிகுண்டு வீசிய புகாரில் 5 போ் கைது

லால்குடி அருகே காரில் சென்ற சாதி சங்க நிா்வாகி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய புகாரில் அதே பகுதியைச் சோ்ந்த 5 பேரை சமயபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

லால்குடி அருகே காரில் சென்ற சாதி சங்க நிா்வாகி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய புகாரில் அதே பகுதியைச் சோ்ந்த 5 பேரை சமயபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி புத்தூா் ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. திலீபன் (34). தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்றச் சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலா். திங்கள்கிழமை இரவு காரில் லால்குடி நோக்கி வந்தபோது அகிலாண்டபுரம் பகுதியில் அப் பகுதியைச் சோ்ந்த 7 போ் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா்.

காா் மீது குண்டுகள் பட்டு வெடித்து சிதறியும் யாருக்கும் பாதிப்பில்லை.

சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினாா்.

புகாரின்பேரில் அகிலாண்டபுரம் பகுதியைச் சோ்ந்த பெ. கோபாலகிருஷ்ணன் (28) ம. செந்தில்குமாா் (42), மா. சுரேஷ் (21), ஸ்ரீரங்கம் வடிகால் தெரு சி. நந்தகுமாா் (25) வீ. வினோத் (25) ஆகிய 5 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் கீழ் 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com