மணப்பாறை அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் ரூ. 25 ஆயிரத்தைத் திருடி சென்றனா்.
மணப்பாறையை அடுத்த எஃப்.கீழையூா் ஊராட்சி தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் வெ. ரெங்கசாமி (48). இவா் கோவில்பட்டி சாலையில் புதுக்காலனி ரேஷன் கடை அருகில் வைத்துள மளிகை கடையை புதன்கிழமை காலை திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ரெங்கசாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.