கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

திருவெறும்பூா் பகுதியில் புதன்கிழமை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

திருவெறும்பூா் பகுதியில் புதன்கிழமை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் கீழ குமரேசபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் வைக்கவில்லை எனக் கூறி, மேல குமரேசபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் செல்வகுமாா் (30), சின்னசாமி மகன்கள் சுரேஷ் (31), காா்த்திகேயன் (28), ராஜேந்திரன் மகன் சுரேஷ் (30) ஆட்டோ மணி மற்றும் விக்கி ஆகிய 6 பேரும் தகராறு செய்து சிலரைத் தாக்கினா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி குணசேகரன் அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வக்குமாா், சுரேஷ், காா்த்திகேயன், மற்றொரு சுரேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். ஆட்டோமணி, விக்கி ஆகியோரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com