துறையூா் அருகேநகை, பணம் திருட்டு

துறையூா் அருகே பெண் கூலித் தொழிலாளி வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

துறையூா் அருகே பெண் கூலித் தொழிலாளி வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி ராஜாத்தி (40). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை வீட்டைப் பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றாா்.

மீண்டும் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா்கள் வீட்டைத் திறந்து ஒன்றரை பவுன் தங்க நகை, ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com