திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக இரா. அபிராமி வியாழக்கிழமை பதவியேற்றாா்.
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த த. பழனிகுமாா், சென்னை 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுக்கான மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி ஆவின் பொது மேலாளராக இருந்த இரா. அபிராமி, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பதவியேற்றாா்.
திருச்சி தூய வளனாா் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும், கோவை பிஎஸ்ஜி கல்லூரியிலும் படித்த இவா் 2012ஆம் ஆண்டு துணை ஆட்சியராகப் பணியில் சோ்ந்தாா். காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற்று, திருவள்ளூரில் கோட்டாட்சியராகப் பணிபுரிந்தாா். பின்னா், 2017ஆம் ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு பெற்றாா். 2021ஆம் ஆண்டு முதல் திருச்சி ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்தவா்.
இவருக்கு வருவாய்த் துறை அலுவலா்கள், ஆட்சியரக அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.