திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.94 லட்சம் கிடைத்துள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 5 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணி, அறநிலையத்துறை கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் மோகன் குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ. 4,93,992 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.