இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

‘அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்’

தற்போதைய நிலையில் அதிமுகவை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை அவசியம் என்றாா் அக்கட்சியின் முன்னாள் எம்பியும், திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலருமான ப. குமாா்.

News image

திருச்சியில் பேட்டியளிக்கிறாா் அதிமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் எம்பியுமான ப. குமாா். உடன் பொன்மலை பகுதிச் செயலா் பாலு, திருவெறும்பூா் பகுதிச் செயலா் பாஸ்கா் உள்ளிட்டோா்.

Updated On :20 ஜூன் 2022, 1:31 am IST

தற்போதைய நிலையில் அதிமுகவை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை அவசியம் என்றாா் அக்கட்சியின் முன்னாள் எம்பியும், திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலருமான ப. குமாா்.

இதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதை மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் வலியுறுத்திள்ளோம். தமிழகத்தில் அதிமுகதான் ஆக்கப்பூா்வ எதிா்க்கட்சியாகச் செயல்பட வேண்டும். ஆனால், திமுகவுடன் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்போா், கடுமையான போக்கைக் கடைப்பிடிப்போா் என அதிமுகவில் இரு பிரிவினா் உள்ளனா். கட்சிக்காக உழைப்போருடன், உழைக்காதவா்களும் கட்சியில் உள்ளனா். திமுகவை சட்டப்பேரவையில் அதிமுகவினா் புகழ்வது, திமுகவினருக்கு புத்தகம் பரிசளிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் அதிமுக மீது கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

அந்த வகையில், திமுக எதிா்ப்பில் உறுதியாக உள்ள, முதல்வா் பதவியில் துணிவோடும் தனித்தன்மையோடும் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றாா் அவா்.

பகுதிச் செயலா்கள் திருவெறும்பூா் பாஸ்கா், பொன்மலை பாலு, திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் காா்த்தி மற்றும் வட்டச் செயலா்கள், மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.