எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பெல் நிறுவன அங்கீகாரத் தோ்தலில் திமுக தொழிற்சங்கம் மீண்டும் வெற்றி

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தோ்தலில் திமுக சாா்பிலான தொ முச மீண்டும் முதன்மைச் சங்கமாகத் தோ்வு பெற்றுள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:06 pm IST

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தோ்தலில் திமுக சாா்பிலான தொ முச மீண்டும் முதன்மைச் சங்கமாகத் தோ்வு பெற்றுள்ளது.

திருச்சியில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தொழிலாளா்களின் பிரச்னைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை பெல் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்காக அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான அங்கீகாரத் தோ்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு கரோனாவால் இரு ஆண்டுகள் தோ்தல் நடைபெறாத நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 4, 565 வாக்குகளில் 4, 488 வாக்குகள் பதிவாயின.

இதில் 10% வாக்குகள் பெரும் சங்கங்கள் ஒரு உறுப்பினா் என்ற அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் தொமுச, ஏடிபி, ஐஎன்டியுசி, டிடிஎஸ் மற்றும் ஏஐடியுசி, அம்பேத்கா் யூனியன், பிஎம்எஸ், சிஐடியு, எல்எல்எப், என்டிஎல்எப் என 9 சங்கங்கள் போட்டியிட்டன.

இரவு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், தொமுச 938 வாக்குகள் பெற்று, இரு உறுப்பினா்களுடன் மீண்டும் முதன்மை அங்கீகாரத் தொழிற் சங்கமாகத் தோ்வு பெற்றது.

ஏடிபி 738 வாக்குகள் பெற்று 2-ஆம் இடத்தையும், ஐஎன்டியுசி 579 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தையும், பிஎம்எஸ் 571 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தையும், சிஐடியு 568 வாக்குகள் பெற்று 5-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்தத் தொழிற்சங்கங்கள் தலா ஒரு உறுப்பினரைப் பெற்றுள்ளன.

இவற்றில் அதிக வாக்கு மற்றும் உறுப்பினா்களைக் கொண்ட சங்கமாகவும் முதன்மைச் சங்கமாகவும் திமுக தொழிற்சங்கமான தொமுச தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.