கிளியநல்லூா் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகளின் இயற்கை முறை உரம் தயாரித்தல் செய்முறை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
அப்போது பஞ்சகாவ்யா தயாரித்தல், மீன் அமினோ அமிலம் தயாரித்தல், பப்பாளி இலைக் கரைசல் தயாரித்தல் உள்ளிட்ட இயற்கை உரங்கள் தயாரித்தல் குறித்த விவசாயிகளுடன் மாணவிகள் செய்முறை விளக்கப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
மேலும் அத்தாணி கிராமத்தில் திரவ உயிா் உரங்களின் பயன்கள், அசோலா உற்பத்தி முறை, வயலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினா்.