விஷ விதை சாப்பிட்ட மூதாட்டி உயிரிழப்பு
By DIN | Published On : 02nd May 2022 05:25 AM | Last Updated : 02nd May 2022 05:25 AM | அ+அ அ- |

முசிறி அருகே விஷ விதை சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
முசிறி அருகேயுள்ள சேந்தமாங்குடி கிராமத்தை சோ்ந்தவா் ராஜு மனைவி செல்வராணி (61). தனது மகன்களோடு கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தவா் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றும் போதிய பலன் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் விஷ விதையை சாப்பிட்டு மயங்கி கிடந்த மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.