‘திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா்’

திமுக அரசை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தை பொதுமக்களிடம் காண முடிகிறது என்றாா் அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா்.
மே தின பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா். உடன் அதிமுக பாசறை மாநிலச் செயலா் பரமசிவம், ஒன்றியச் செயலா் ராவணன், பகுதிச் செயலா் பாஸ்கா் உள்ளிட்டோா்.
மே தின பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா். உடன் அதிமுக பாசறை மாநிலச் செயலா் பரமசிவம், ஒன்றியச் செயலா் ராவணன், பகுதிச் செயலா் பாஸ்கா் உள்ளிட்டோா்.

திமுக அரசை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தை பொதுமக்களிடம் காண முடிகிறது என்றாா் அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா்.

திருச்சி அதிமுக புகா் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் திருவெறும்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்துக்கு செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ப. குமாா் மேலும் பேசியது:

பொய் வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் நடித்து வருகிறாா். எதையுமே போராடித்தான் பெற வேண்டியுள்ளது. உண்மையான மக்களாட்சியைத் தந்தவா்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான். திமுகவின் மாயையான வெற்றியை வரும் தோ்தலில் அதிமுக முறியடித்து ஆட்சியைக் கைப்பற்றும்.

அரைவட்டச் சுற்றுச்சாலை, அணுகு சாலை உள்பட திருவெறும்பூா் தொகுதி குறித்து திமுக தோ்தல் அறிக்கையில் கூறிய எதையுமே நிறைவேற்றவில்லை. மக்களின் அதிருப்தியால் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றாா் அவா்.

இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் பரமசிவம், தலைமையிட பேச்சாளா்கள் ராமலிங்கம், அன்புமுருகன் உள்ளிட்டோா் பேசினா்.

அதிமுக நிா்வாகிகள் ராவணன், பாண்டியன், ராஜா, சாந்தி, துவாக்குடி மனோகா், சீனிவாசன், கோபிநாத், கணபதி, கோகிலா உட்பட திரளானோா் கலந்து கொண்டனா். திருவெறும்பூா் பகுதி செயலா் பாஸ்கா் வரவேற்றாா். பொன்மலை பகுதி செயலா் பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com