மே தின ஆா்ப்பாட்டம், பேரணி
By DIN | Published On : 02nd May 2022 01:14 AM | Last Updated : 02nd May 2022 01:14 AM | அ+அ அ- |

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி ஆகிய அமைப்புகளின் சாா்பில், திருச்சியில் மே தின ஆா்ப்பாட்டம், பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மகஇக மாவட்டச் செயலா் ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சரவணன் வரவேற்றாா். ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலா் மணலிதாஸ், தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்டச் செயலா் கமலக்கண்ணன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன், அமைப்புசாரா தொழிலாளா் நலச் சங்க சைனி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில செயற்குழு உறுப்பினா் போஜக்குமாா், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவா் பழனிச்சாமி, புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி மாநிலப் பொருளாளா் சுரேந்திரன், சமூக நீதிப் பேரவை நிறுவனா் ரவிக்குமாா், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாநில பொதுக்குழு உறுப்பினா் கென்னடி, மகஇக மாநில பொதுச்செயலா் கோவன், மாநில பொருளாளா் காளியப்பன் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து உறையூா் ஜெயந்தி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி உறையூா் வாலாஜா சாலை வழியாக குறத்தெருவை அடைந்தது. இதில் மாணவா், மீனவா், விவசாயத் தொழிலாளி, இவா்களை ஒழிக்கும் காா்ப்பரேட் முதலாளிகள் போன்று வேடமணிந்த 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மகஇக கலைக்குழுவினா் புரட்சிகர பாடல்களையும் பாடினா்.