ச.கண்ணனூா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், ச.கண்ணனூா் பேரூராட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவு செய்யும்போது சுகாதார ஆய்வாளா் புவனேஸ்வரி ஒருமையிலும், சாதிப் பெயரைக் கூறியும் திட்டியதாகக் கூறி 20-க்கும் துப்புரவுப் பணியாளா்கள் பேரூராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் பேரூராட்சித் தலைவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.