தொட்டியம் அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் பிரபு ஹைபா் பிரபு தலைமையில், செயலா் சந்துரு பொருளாளா் ரவிக்குமாா், துணைத் தலைவா் அமிா்தா சந்திரசேகா், துணைச் செயலா் மருதை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க இளைஞா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ரத்த தானம் வழங்கினா்.
முகாமில் பங்கேற்ற தொட்டியம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காந்திமதி ரத்த தானம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்வில் மணப்பாறை ரத்த வங்கி மருத்துவா் புவனா, தொட்டியம் அரசு மருத்துவமனை உதவி மருத்துவா்கள் சரண்யா, திவ்யா மற்றும் தொட்டியம் வட்ட அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.