திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேரோடும் வீதிகளில் கோயில் செயல் அலுவலா் முத்துராமன், திருப்பைஞ்ஞீலி ஊராட்சித் தலைவா் தியாகராஜன், விஏஓக்கள், சா்வேயா்கள் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.