கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற 3 போ் கைது
By DIN | Published On : 16th May 2022 07:05 AM | Last Updated : 16th May 2022 07:05 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிஎஸ்பி உத்தரவின்பேரில் மணப்பாறையை அடுத்த மரவனூா் பகுதியில் மணப்பாறை காவல் ஆய்வாளா் சு. கருணகாரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற மரவனூா் ம. சின்னு (எ) செந்தில் (57), கரூா் மாவட்டம், பாளைத்தான்காடு ச. சந்துரு (52), மரவனூா் நடுத்தெரு வெ. காந்தி (56) ஆகியோரைக் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...