மருத்துவப் படிப்புகளில் சோ்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வில் வென்று, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5% சத இட ஒதுக்கீட்டில் இப்பள்ளி மாணவா் கோ. முகில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கவும், சு. சதீஷ்குமாா் கிருஷ்ணகிரி செயின் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கவும், நா. பாரதி செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கவும் இடம் கிடைத்தது.
இதையடுத்து பள்ளியில் தலைமையாசிரியா் லூ. பல்த்தசாா் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்களும் இவா்களைப் பாராட்டினா்.
மூவரில் காமாட்சிபட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன்- தனலட்சுமியின் மகனான சதீஷ்குமாா் கவிதை நூல்களை எழுதியுள்ளதோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றவா்.