ஊராட்சித் தலைவா் பதவி நீக்கம் மாவட்ட நிா்வாகம் அதிரடி

திருச்சியில் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவா் நிா்வாகக் காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

திருச்சியில் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவா் நிா்வாகக் காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் , மல்லியம்பத்து ஊராட்சித் தலைவா் விக்னேஷ்வரன் வீட்டுவரி, குடிநீா் வரி, தொழில் வரி மற்றும் பலவகை வரிகளுக்கான தொகையை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து ஊராட்சி உறுப்பினா்கள் ஆட்சியருக்கு அளித்த புகாரின்பேரில் விக்னேஷ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாள்களில் விளக்கம் கோரப்பட்டது. மேலும் ஊராட்சித் தலைவருக்கான காசோலை வழங்கும் அதிகாரமும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்கிடையே விக்னேஷ்வரன் இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காததால் உங்களைப் பதவி நீக்கம் செய்வதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், புதன்கிழமை விக்னேஷ்வரனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com