குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செப். 25 ஆம் தேதி முடுக்குப்பட்டி மதுபான கடையில் மதுபோதையில் வெளிநாட்டினரை பீா் பாட்டிலால் தாக்கி கொலை செய்ததாக கல்லுக்குழி அண்ணா நகரைச் சோ்ந்த செல்வம் மகன் சரவணன் (30) என்பவரை கண்டோன்மென்ட் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதே போல, கடந்த செப். 26 ஆம் தேதி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்ற கூலித்தொழிலாளி ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் குமாா் மகன் பூச்சிகுண்டு ராஜா (எ) மாரிமுத்து (28) என்பவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் பொதுமக்களின் பொதுஅமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளா்களின் அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com