பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் பொன்னூஞ்சல் விழா

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2022, 2:20 pm IST

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் ஸ்ரீ பூதநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் புரட்டாசி மாதம் முதல் திங்கட்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கும் திருவிழா 18 நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அதன்படி இவ்வாண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி திங்கள்கிழமை நாட்டு சிறப்பு முடிந்து பூச்சொரிதலுடன் தொடங்கிய ஆலய வருடாந்திர திருவிழாவில் தினந்தோறும் ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெறுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் 20-ஆம் தேதி செவ்வாய்கிழமை காப்பு கட்டுதலை தொடர்ந்து 27-ஆம் தேதி முதல் ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நாட்டார்கள் மண்டகப்படியான நேற்று இரவு நடைபெற்றது. ஸ்ரீ பூதநாயகி அம்மன் உற்சவம் மின்னொளி அலங்கார பல்லாக்கில் பவனி வர தாரைதப்பட்டைகள் முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது. பல்லாக்கை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர். பின் கடைவீதி பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் அருகில் அம்மன் பல்லாக்கில் இருந்து இறக்கப்பட்டு அங்கு பொன்னூஞ்சல் நிக்ழச்சி நடைபெற்றது. பெண்கள் துதி பாட, ஆண்கள் வடம் பிடித்து ஊஞ்சலை இழுத்துவிட, அம்மன் பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்து, ஊர்முக்கியஸ்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விடியற்காலை ஆலய திடலில் பொங்கல், கிடா வெட்டுதல் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சியுடனும் திருவிழா அக்டோபர் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.