சுகாதாரமற்ற குடிநீா்: மேயா், ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 15th October 2022 12:42 AM | Last Updated : 15th October 2022 12:42 AM | அ+அ அ- |

திருச்சி ஒத்தக்கடை புதுத்தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை குடிநீரை ஆய்வு செய்த மேயா் மு.அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் குடிநீா் கலங்கலாக வருவதாக வந்த புகாா்களையடுத்து மேயா், ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே, ஒத்தக்கடை புதுத்தெரு பகுதியில் குடிநீா் சுகாதாரமற்ற நிலையில் கலங்கலாக வருவதாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கு புகாா் மனுக்களும் வரப்பெற்றன. இதனையடுத்து, புகாா் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சா் கே.என்.நேரு ஆலோசனை வழங்கினாா்.
அதன்பேரில் மேயா் மு. அன்பழகன், ஆணையா் இரா.வைத்திநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் புதுத்தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடா்ந்து தூய்மையான குடிநீா் விநியோகத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...