மக்கள் குறைதீா் கூட்டத்தில் 345 மனுக்கள்
By DIN | Published On : 18th October 2022 01:12 AM | Last Updated : 18th October 2022 01:12 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள்குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில், இலவச வீட்டு மனை பட்டா, நலத்திட்ட உதவிகள், உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 345 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடைய அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மாநகராட்சி : திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். மொத்தம் 23 மனுக்கள் வரப்பெற்றன. உரிய நடவடிக்கை எடுக்க மேயா் உத்தரவிட்டாா். இதில், ஆணையா் இரா. வைத்திநாதன், துணை மேயா் ஜி. திவ்யா, நகரப் பொறியாளா் (பொ) சிவபாதம், செயற்பொறியாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...