துறையூா் அருகே உள்ள மேலக்கொத்தம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் இருக்காது என துறையூா் மின்கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மேலக்கொத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.17) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆதனூா், மீனாட்சிப்பட்டி, கட்டனாம்பட்டி, கிளியனூா்பட்டி, பொன்னம்பலம்பட்டி, கீரிப்பட்டி, நல்லியம்பட்டி, உள்ளூா், வெளியனூா், பேரூா், ஜெயன்கொண்டம், திருத்தலையூா், கோதூா்பட்டி, ஜம்புநாதபுரம், துலையாநத்தம், வாழவந்தி, மங்கலம், கிருஷ்ணாபுரம், மாவிலிப்பட்டி, பைத்தம்பாறை, வலையப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.